ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இரவு சுமார் 7 மணியளவில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.