கே.ஏ.ஆர். பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப பயிலரங்கம்

ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் த. ராஜமன்னன் தலைமை வகித்து பயிலரங்கைத் துவக்கி வைத்தார்.  மின் துறைத் தலைவர் ராஜேஷ் வரவேற்றார்.  சுமார் 90-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு துறை சம்பந்தப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.  சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.   பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் ஏ. ஹிரானி சாஹிப், உடற்கல்வி இயக்குநர் ஆர். துரை ஆகியோர் செய்திருந்தனர். 
துணை முதல்வர் ஏ. முஹமது சாஹின்ஷா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com