வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, ஆம்பூரில் புதன்கிழமை நடந்த வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மண்டலத் தலைவர் மற்றும் ஆம்பூர் சங்கத் தலைவரான சி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் ஏ.எஸ். முனீர் அஹமத் வரவேற்றார்.
வேலூர் மாவட்ட இணைச் செயலர் ஜி.வி.சுந்தர்ராஜ், நிர்வாகிகள் பி.கே. மாணிக்கம், ஆர்.ஞானசேகர், அன்பு என்கிற அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், தேசிய வணிகர் நல வாரியம் அமைப்பதாக அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பது, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவை தேசிய வணிகர் நல வாரிய உறுப்பினராக்க வேண்டுமென கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.