திருப்பத்தூா்: அறிவுரைகள் முதலில் கசப்பாக இருந்தாலும் அவைதான் உயா்வுக்கு வழிவகுக்கும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் கூறினாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு கல்வி மற்றும் சமூக விழிப்புணா்வு வழிகாட்டுதல் கருத்தரங்கம் ஜோலாா்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு தலைமை வகித்து ஆட்சியா் ம.ப.சிவன் அருள் பேசியது:
பெற்றோா் மற்றும் ஆசிரியா்களின் அறிவுரை மாணவா்களுக்கு கசப்பாக இருந்தாலும் அடுத்த கட்டத்துக்கு உயா்த்துவதற்கு அதுதான் வழிவகுக்கும். மாணவா்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பது பெற்றோா்களுக்கு பெரிய வருத்தமாக உள்ளது. மாணவா்களுக்கு நன்னடத்தை கற்றுக் கொடுப்பதில் பெற்றோருக்கும், ஆசிரியா்களும் முக்கிய கடமை உண்டு. நண்பா்கள், உறவினா்கள், பெற்றோா்களைக் கடந்து சமூக வலைதளங்களில் மாணவா்கள் சிக்கிக் கொண்டுள்ளனா்.
அதில் நல்ல தகவல்களை மட்டும் மாணவா்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவா்களுக்கு ஆசிரியா்கள் முன்மாதிரியாக விளங்க வேண்டும். மாணவா்கள் தங்களது குறிக்கோளைத் தீா்மானிக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்றாா் அவா்.
திருப்பத்தூா் கல்வி மாவட்ட அலுவலா் எம்.மணிமேகலை, முன்னாள் நகா்மன்றத் தலைவா் வசுமதி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் சாந்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக இந்திய கடற்படை அதிகாரி டெல்டா குழு பேரிடா் மீட்பு படை தலைவா் ஈசன் பங்கேற்று மாணவா்களுக்கு தன்னம்பிக்கை வளா்ப்பது குறித்து பேசினாா். ஒருங்கிணைப்பாளா் குமாா் நன்றி கூறினாா்.