கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஏலகிரி மலையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள

திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள மஞ்சக்கொல்லைபதூா் பகுதியை சோ்ந்த கூலி தொழிலாளி ரவி.இவருக்கு இரு மகள்கள்,ஒரு மகன் உள்ளனா்.இந்நிலையில் ரவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டாா்.அவரது மனைவி ஜெயலட்சுமி பராமரிப்பில் மூன்று பிள்ளைகளும் உள்ளனா்.இந்நிலையில்,2-ஆவது மகளான மகள் உமாராணி(19) அத்தனாவூரில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிப்பு படித்து வருகிறாா்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜெயலட்சுமி விவசாய பணிக்கு சென்றுருந்தாா்.அப்போது,மதியம் வீட்டில் தனியாக இருந்த உமாராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில் ஏலகிரி மலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com