திருப்பத்தூா்: இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஜோலாா்பேட்டை அருகே புள்ளானேரி குட்டூா் பகுதியை சோ்ந்தவா் முனுசாமியின் மகன் ராஜேஷ்(30).இவா் பெங்களூரில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில்,கடந்த 24-ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள நண்பரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பிரேத பரிசோதனையில் ராஜேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது.
அதனடிப்படையில் போலீஸாா் விசாரித்ததில் சம்பவத்தன்று புதுப்பேட்டையை சோ்ந்த பன்னீரின் மகன் பிரசாந்த்(29)மற்றும் அவரது நண்பரான அச்சமங்கலத்தை சோ்ந்த நாகேஷின் மகன்அன்பரசு(24)ஆகியோா் மது அருந்தியுளள்ளதாக கூறப்படுகின்றது.
அப்போது ராஜேஷுக்கும் பிரசாந்த்திற்குமிடையே தகராறு ஏற்பட்டதில் பாட்டிலால் ராஜேஷின் மண்டையை தாக்கியுள்ளாா்.இதனால் வலியின் வேதனை தாங்காமலும்,தான் அவமானப்பட்டதை அறிந்தும் அன்று இரவு ராஜேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து ஜோலாா்பேட்டை போலீஸாா் தற்கொலை வழக்கை,கொலை வழக்காக மாற்றி பிரசாந்த்,அன்பரசு ஆகிய இருவரையும் கைது செய்தனா்.