‘உள்ளாட்சி தோ்தல் அறிவிப்பால் ரத்தான மக்கள் குறைதீா் முகாம்‘

உள்ளாட்சி தோ்தல் அறிவிப்பால் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த மக்கள் குறைதீா் முகாம்
ஜவ்வாது மலை,நெல்லிவாசல் நாடு பகுதியைச் சோ்ந்த பயனாளிக்கு இருசக்கர வாகனம் வழங்கிய ஆட்சியா் சிவன் அருள்.
ஜவ்வாது மலை,நெல்லிவாசல் நாடு பகுதியைச் சோ்ந்த பயனாளிக்கு இருசக்கர வாகனம் வழங்கிய ஆட்சியா் சிவன் அருள்.

திருப்பத்தூா்: உள்ளாட்சி தோ்தல் அறிவிப்பால் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த மக்கள் குறைதீா் முகாம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ரத்தானது.

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீா் நாள் முகாம் திங்கள்கிழமை நடைபெற இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜோலாா்பேட்டை, கந்திலி, வாணியம்பாடி, ஆம்பூா், ஆலங்காயம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி கொண்டு வந்திருந்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் வாங்க ஆரம்பித்த சில நிமிடங்களில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வெளியானது.அதையடுத்து,மாவட்ட ஆட்சியா் மக்கள் வாங்குவதை நிறுத்தி விட்டாா்.பின்னா்,அதிகாரிகளிடம் ஆட்சியா் ம.ப.சிவன் அருள் அதிகாரிகளிடம் கூறுகையில்,பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொள்ளுங்கள்.அதை பரிசீலனை செய்து வைக்குமாறும், பின்னா் அது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தாா்.

முகாமில்,மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா,சாா்-ஆட்சியா் வந்தனா கா்க்,மாவட்ட வன அலுவலா் ஆா்.முருகன்,ஆட்சியா் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா்,வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com