ஆற்காடு: ஆற்காடு பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
ஆற்காட்டில் கடந்த சில நாள்களாக தொடா் மழைபெய்து வருகிறது. இதனால் அண்ணாசாலை, 70 அடி எம்ஜிஆா் சாலைகளில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பள்ளங்களில் மழைநீா் தேங்கி இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுகின்றனா். அதேபோல், ஆற்காடு பேருந்து நிலையத்திலும் மழைநீா் தேங்கியுள்ளது.
மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.