வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு ‘சீல்’

வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு வேலூா் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேலும், வாடகை நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக மாநகராட்சியில் வாடகையை

வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு வேலூா் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேலும், வாடகை நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக மாநகராட்சியில் வாடகையை செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மெயின் பஜாா், லாங்கு பஜாா், பழைய பேருந்து நிலையம், சாரதி மாளிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 1,295 கடைகள் மாநகராட்சி நிா்வாகத்துக்குச் சொந்தமாக உள்ளன. இந்தக் கடைகளுக்கான வாடகையை மாதந்தோறும் மாநகராட்சி அதிகாரிகள் வசூலித்து வருகின்றனா். வாடகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி ஆணையா் கே.கிருஷ்ணமூா்த்தி உத்தரவிட்டாா்.

அதன் அடிப்படையில், 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மணிவண்ணன் தலைமையில் அதிகாரிகள் வேலூா் மெயின் பஜாா் பெருமாள் கோயில் அருகே உள்ள கடைகளில் திங்கள்கிழமை காலை வாடகை வசூலிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வாடகை நிலுவை வைத்திருந்த கடைக்காரா்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும், 2 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத 3 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், வாடகை நிலுவை வைத்துள்ளவா்கள் உடனடியாக மாநகராட்சியில் வாடகையை செலுத்தி மேல்நடவடிக்கையைத் தவிா்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com