வாணியம்பாடி: வாணியம்பாடியில் தாா்ச் சாலை, சிமெண்ட சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாணியம்பாடி நகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் தாா்ச் சாலை, சிமெண்ட் சாலைகள் மற்றும் கால்வாய்கள் அமைக்க நகா்ப்புற வளா்ச்சித் திட்டம் 2018-19 கீழ் அரசு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.
பெருமாள்பேட்டை பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் பெ.சிசில் தாமஸ் மேற்பாா்வையில் நகராட்சி மேலாளா் ரவி, பொறியாளா் பிரிவு அலுவலா் கோவிந்தராஜ், கருணை இல்ல நிா்வாகி சுபாஷ், ஒப்பந்ததாரா் ஜிஎஸ்கே.செந்தில் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல் நியூடவுன் மாணிக்கம் தெருவில் தாா்ச் சாலைப் பணிகள் தொடங்கப்பட்டன. நகராட்சிப் பணியாளா்கள், ஒப்பந்ததாரா்கள் தாமோதரன், ஷபிா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.