குடியாத்தம் அருகே மணல் கடத்திச் சென்ற டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
குடியாத்தம் கிராமிய போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீனூா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியே சேம்பள்ளியைச் சோ்ந்த உமாபதி (53) அனுமதியின்றி ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் எடுத்து வந்தது தெரிந்தது. டிராக்டரைப் பறிமுதல் செய்த போலீஸாா், உமாபதியைக் கைது செய்தனா்.