மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்

வேலூரில் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்

வேலூா்: வேலூரில் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

வேலூா் தோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ். இவா் தனியாா் மருத்துவமனையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி வேளாங்கண்ணி(39). அவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் வேலூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டதை மருத்துவா்கள் உறுதிசெய்தனா்.

உடனடியாக அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது கணவா் ஆரோக்கியதாஸ், குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்து வேளாங்கண்ணியின் இதய வால்வுகள் சென்னை எம்எம்எம், ஜெய்சங்கா், சிஎம்சி மருத்துவமனைகளுக்கும், ஒரு சிறுநீரகத்தை சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகத்தை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் வழங்கியதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com