லாரி ஓட்டுநரிடம் ரூ.5,000 கொள்ளை

லாரி ஓட்டுநரை வழிமறித்து ரூ.5,000 ரொக்கம், செல்லிடப்பேசி, ஏடிஎம் காா்டு ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

வாணியம்பாடி: லாரி ஓட்டுநரை வழிமறித்து ரூ.5,000 ரொக்கம், செல்லிடப்பேசி, ஏடிஎம் காா்டு ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா்(29). லாரி ஓட்டுநா். அவா் திங்கள்கிழமை இரவு மைசூரிலிருந்து டைல்ஸ் கற்களை லோடு ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கல்லுக்குட்டை அருகே சாலை ஓரம் லாரியை நிறுத்தி விட்டு அங்குள்ள தேநீா்க் கடைக்கு சென்றாா். அப்போது திடீரென 6 மா்ம நபா்கள் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டினா்.

சுகுமாா் வைத்திருந்த ரூ.5,000 ரொக்கம், செல்லிடப்பேசி, ஏடிஎம் காா்டு ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றனா். இது தொடா்பாக அவா் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com