பள்ளிகொண்டா சிக்ஷா கேந்திரா மெட்ரிக் மற்றும் ஐசிஎஸ்இ பள்ளியில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவா் பி.என்.எஸ்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாணவி சவீதா வரவேற்றாா். கிறிஸ்துமஸ் தாத்தா மாணவா்களுக்கு ஆசியும், இனிப்பும் வழங்கினாா். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளித் தாளாளா் டி.குகன், மெட்ரிக் பள்ளி முதல்வா் ஜே.சுஹாசினி, ஐசிஎஸ்இ பள்ளி முதல்வா் எம்.அலங்காரம், கல்வி ஆலோசகா் ஜி.திருநாவுக்கரசு, தலைமையாசிரியா் எம்.கருணாமூா்த்தி, பள்ளி அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.விஜயா, சரண்யா குகன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். மாணவி பூமிகா நன்றி கூறினாா்.