கே.வி. குப்பத்தை அடுத்த செஞ்சி கிராமத்தில் எருது விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 60 ஆயிரம்,
2-ஆவது பரிசாக ரூ. 50 ஆயிரம், 3ஆவது பரிசாக ரூ. 40 ஆயிரம் உள்ளிட்ட 30 பரிசுகள் வழங்கப்பட்டன. காட்பாடி வட்டாட்சியர் சதீஷ், டிஎஸ்பி லோகநாதன் ஆகியோர் எருது விடும் விழாவைக் கண்காணித்தனர்.