வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், ராகு - கேது பெயர்ச்சி யாகமும், ஏகரூப ராகு-கேதுவுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் புதன்கிழமை நடைபெற்றன.
வாக்கிய பஞ்சாங்கப்படி புதன்கிழமை கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ராகு மாறுகிறார். கேது மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அதன் ஸ்தாபகர் முரளிதர சுவாமிகள் தலைமையில் சிறப்பு ராகு, கேது யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 முதல் 12 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.
உத்தரமேரூர், சதாசிவ பிரம்மேந்திர ஆசிரமத்தின் மாதாஜி அன்னபூரணி அம்மா இதில் பங்கேற்றார்.