ஜோலார்பேட்டையில் பெண்ணிடம் மயக்கப் பொடி தூவி 9 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த மேட்டுசக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரின் மனைவி ராதம்மாள் (55). இவர், புதன்கிழமை வாணியம்பாடி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் சந்தைகோடியூர் பகுதியில் நடைப்பயிற்சி சென்றார்.
அப்போது சாலையோரத்தில் நின்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் மயக்கப் பொடி தூவினார். இதில் மயக்கமடைந்த ராதம்மாளிடம் இருந்த 9 சவரன் நகையைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.