ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் பொன்னியம்மன், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு கசலப் புறப்பாடு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து விமானக் கலசங்கள், நுழைவு வாயில், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், தீபாராதனை, மகா அபிஷேகம் ஆகியவையும் நடத்தப்பட்டன.
இரவு சிம்ம வாகன மூர்த்தியுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்களும், ஆற்காடு சட்டப் பேரவை உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.எல்.இளவழகன், தொழிலதிபர் ஏ.கே.முரளி, விழாக் குழுவினர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.