ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில், துப்புரவுத் தொழிலாளர் உயிரிழந்தார்.
ஆற்காட்டை அடுத்த கலவை பகுதியைச் சேர்ந்தவர் துப்புரவு தொழிலாளர் ராஜாராம் (34). இவர் வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் ஆற்காடு வந்தார். பின்னர் கலவை நோக்கிச் செல்லும்போது பாப்பேரி அருகே பின்னால் வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஆற்காடு கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.