விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு

ஆற்காடு ஏரி கீழ் தெருவில் 56-ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு ஏரி கீழ் தெருவில் 56-ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தெய்வானை ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சி.ஹேம்நாத் வரவேற்றார். 
இதில், விளையாட்டுப் போட்டி, கோலப்போட்டி, பானை உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.  
விழாவில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வேண்டாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com