ஆம்பூர் நகர அதிமுக சார்பில், வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் நகர அதிமுக செயலர் எம். மதியழகன் தலைமை வகித்தார். வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளரான புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அதிமுக மாவட்ட விவசாயப் பிரிவு செயலர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் ஜி.ஏ. டில்லிபாபு, மாதனூர் ஒன்றிய அதிமுக செயலர் ஜெ.ஜோதிராமலிங்கராஜா, அகரம்சேரி ஆர்.வெங்கடேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், பிரேம்குமார், அமீன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி ஆனந்த்பாபு, தமாகா வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், அமமுகவிலிருந்து விலகிய சுமார் 50 பேர் அதிமுகவில் இணைந்தனர்.