திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஞ்சல் குறைதீர் முகாம் ஜூலை 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் எஸ்.சுப்பாராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூலை 15-ஆம் தேதி பகல் 12 மணிக்கு அஞ்சல் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் பதிவுத் தபால், விரைவுத் தபால், மணியார்டர், சேமிப்பு கணக்குகள், சேமிப்புப் பத்திரங்கள், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அஞ்சல் சேவை குறித்த புகார்களை முழு விவரங்களுடன் நேரடியாக வந்து தெரிவிக்கலாம்.