பள்ளியில் இயற்கை விழா

வாணியம்பாடி ஆதர்ஷ் பள்ளியில் இயற்கையை மீட்போம் என்ற தலைப்பில் பச்சை வண்ண விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

வாணியம்பாடி ஆதர்ஷ் பள்ளியில் இயற்கையை மீட்போம் என்ற தலைப்பில் பச்சை வண்ண விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
ஆசிரியைகள், பச்சை காய்கறி பழங்களின் பயன்களைப் பற்றியும், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் பேசினர். மழலை மாணவர்கள் பசுமையான இயற்கை குறித்து பாடல் பாடியும், நடனம் ஆடியும், அணிவகுப்பு சென்றனர். தொடர்ந்து பள்ளித் தாளாளர் செந்தில்குமார் தலைமையில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தனர். 
பள்ளி முதல்வர் செல்வநாயகி, மேலாளர் ஷபானாபேகம் மற்றும் ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 
விழா ஏற்பாடுகளை ஆசிரியை ஹாஜிரா செய்திருந்தார். மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் உமேராபானு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com