யானை மேல் வீதி உலா வந்த அம்மன்

ஆம்பூர் அருகே யானை மேல்  அம்மன் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூர் அருகே யானை மேல்  அம்மன் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேல் வழித்துணையாங்குப்பம் கிராமத்தில்  42-ஆம் ஆண்டு சரஸ்வதி லட்சுமி சமேத திருப்பதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கெங்கை அம்மன் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றன. ஊர் மக்கள் சார்பில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
தொடர்ந்து குளக்கரையில் இருந்து புறப்பட்டு திருப்பதி ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு யானைப் படை சூழ ஆற்றங்கரை நோக்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. மதியம் 1 மணிக்கு மகா  பைரவி யாகம், அன்னதானம், மாலை தீமிதி விழாவும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com