ஆம்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கன மழை பெய்தது.
இப்பகுதியில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. பிறகு விட்டுவிட்டு நள்ளிரவு வரை கன மழை நீடித்தது.
வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் மழை காரணமாக ஏற்பட்ட குளிச்சியால் மகிழ்ச்சி அடைந்தனர்.