திருப்பத்தூர் அருகே காப்புக்காட்டில் மரங்களை வெட்டியவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
வனச்சரக அலுவலர் கே.ஆர்.சோழராஜன் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வனச்சரகம் ஆண்டியப்பனூர் காப்புக்காட்டில் கரம்பூர் முருகர் கோயி பகுதியில் வனவர் சஞ்சீவி, வனக்காப்பாளர்கள் இளையராஜா, வெங்கடேசன், அண்ணாமலை மற்றும் வனக்காவலர் ரவி உள்ளிட்டோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சாம்ராஜ் (47) என்பவர் காப்புக்காட்டில் மரங்களை வெட்டி, கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். அவரைக் கைது செய்த வனத்துறையினர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.