பள்ளி வாசல்களில் வாக்கு சேகரிப்பு

வாணியம்பாடி பெரியபேட்டையில் உள்ள மசூதியில் தொகுதி பொறுப்பாளரும் மாநில உயர்கல்வித் துறை அமைச்சருமான

வாணியம்பாடி பெரியபேட்டையில் உள்ள மசூதியில் தொகுதி பொறுப்பாளரும் மாநில உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், வட சென்னை மாவட்டச் செயலர் ராஜேஷ், நகரச் செயலர் சதாசிவம் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். 
ஆலங்காயம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி அதிமுக சார்பில் ஆலங்காயத்தில் ஒன்றியச் செயலரும், முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் தலைமையில் மசூதிகளில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமாராஜ், மேட்டூர் எம்எல்ஏ செம்மலை,  மாநில கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன், பேரூராட்சி செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.


ஆம்பூரில்...
ஆம்பூர் நகர திமுக செயலர் எம்.ஆர். ஆறுமுகம் தலைமையில் பெரிய மசூதியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். ஆம்பூர் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆனந்தன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆசிப்கான், நிர்வாகிகள் சாமுவேல் செல்லபாண்டியன், முஹம்மதலி, அசோக் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.
மின்னூர் கிராமத்தில் உள்ள பள்ளி வாசலில் மாதனூர் ஒன்றிய திமுக செயலர் ப.ச.சுரேப்குமார் தலைமையில் வேலூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்தமிச்செல்வி வாக்கு சேகரித்தார். 
அதிமுக: ஆம்பூர் நகர அதிமுக செயலர் எம்.மதியழகன் தலைமையில் பெரிய மசூதியில் மாநில வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். எம்எல்ஏக்கள் நிலக்கோட்டை தேன்மொழி, வேடச்சந்தூர் பரமசிவம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் முரதராஜ், ஆம்பூர் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் கே. நஜர் முஹம்மத், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அமீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தலைமையில் ஆம்பூர் சின்ன மசூதியில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.  நிர்வாகி அன்பரசன் உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.
நாம் தமிழர் கட்சி: ஆம்பூர் பெரிய மசூதியில் வேலூர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

குடியாத்தத்தில்...
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தமிழக சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா குடியாத்தம் நகரில் உள்ள முஸ்லிம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
சித்தூர்கேட், ஆலியார் தெரு, தரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அங்குள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.
அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என்.பழனி, தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பெருமாள், அதிமுக நிர்வாகிகள் ஆர். மூர்த்தி, எஸ்.ஐ. அன்வர்பாஷா, டி. அக்பர்ஷெரீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com