குடியாத்தம் அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம் நகர போலீஸார் வெள்ளிக்கிழமை போடிப்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கௌன்டன்யா ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் வினோத், தென்னரசன், சங்கர், முனிசாமி ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.