பேருந்து மோதி தொழிலாளி பலி

கே.வி. குப்பம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

கே.வி. குப்பம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
சோழமூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(30). இவர், கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் வந்தார். கே.ஏ.மோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் ராஜேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து கே.வி. குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com