வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கான காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காசநோய் மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு துணை இயக்குநர் பிரகாஷ் அய்யப்பன் பங்கேற்று சிறைக் கைதிகளிடையே காசநோய் வராமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் சிறைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.