குடியாத்தம் சீவூரைச் சேர்ந்த முன்னாள் மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைசாமி சனிக்கிழமை பாமகவில் இணைந்தார்.
திமுகவைச் சேர்ந்த எஸ்.துரைசாமி 1996-இல் குடியாத்தம் ஒன்றியக் குழுத் தலைவராகவும், 2006-இல் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தார். திமுகவில் ஒன்றியச் செயலர், மாவட்டப் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்த இவர், சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், மாநில துணைப் பொதுச் செயலர் கே.எல்.இளவழகன், மாவட்டச் செயலர் ஜி.கே.ரவி ஆகியோர் முன்னிலையில் எஸ்.துரைசாமி பாமகவில் இணைந்தார்.