வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

நெமிலி பேரூராட்சி சார்பில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

நெமிலி பேரூராட்சி சார்பில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தலும் அதனுடன் இணைந்து சோளிங்கர் சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதிசெய்ய வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நெமிலி பேரூராட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் தொடங்கி வைத்தார். 
இதில் நெமிலி பேரூராட்சிப் பகுதிக்கு உள்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் பங்கேற்றனர். முக்கிய தெருக்கள் வழியாகச் சென்ற ஊர்வலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com