திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்: வேலூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக வேலூர் கன்டோன்மென்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 20, 21 ஆகிய


பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக வேலூர் கன்டோன்மென்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 
வேலூர் கன்டோன்மென்ட்-திருவண்ணாமலை: வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து மார்ச் 20-ஆம் தேதி  இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் (எம்.இ.எம்.யு.,) புறப்பட்டு, அதேநாளில் இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். இந்த ரயில் கணியம்பாடியை இரவு 9.57 மணிக்கும், கண்ணமங்கலத்தை இரவு 10.09 மணிக்கும், ஆரணி சாலையை இரவு 10.24 மணிக்கும், போளூரை இரவு 10.40 மணிக்கும்,  அகரத்தை 10.51 மணிக்கும், துரிஞ்சாபுரத்தை இரவு 11.07 மணிக்கும் சென்றடையும்.
திருவண்ணாமலை-வேலூர் கன்டோன்மென்ட்: திருவண்ணாமலையில் இருந்து மார்ச் 21-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ரயில்(எம்.இ.எம்.யு) புறப்பட்டு, அதேநாளில் காலை 5.55 மணிக்கு வேலூர் கன்டோன்மென்டை அடையும். இந்த ரயில் துரிஞ்சாபுரத்தை அதிகாலை 4.12 மணிக்கும், அகரத்தை அதிகாலை 4.29 மணிக்கும், போளூரை அதிகாலை 4.41மணிக்கும்,  ஆரணி சாலையை அதிகாலை 5.00 மணிக்கும், கண்ணமங்கலத்தை அதிகாலை 5.16 மணிக்கும், கணியம்பாடியை அதிகாலை 5.33 மணிக்கும் வந்தடையும்.  இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com