தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த லாரி

திருப்பத்தூரில் தடுப்புச் சுவரில் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருப்பத்தூரில் தடுப்புச் சுவரில் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோட்டிலிருந்து ஹைதராபாதுக்கு பேப்பர் ரோல் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. அரூரைச் சேர்ந்த மாதேஷ் (47) லாரியை ஓட்டினார். உதவியாளர் தங்கராஜ் (35) உடன் இருந்தார். திருப்பத்தூர்-வாணியம்பாடி நெடுஞ்சாலையில் வந்தபோது, சாலையின் தடுப்புச் சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநரும், உதவியாளரும் காயமின்றி தப்பினர். 
இதனால், அப்பகுதியில் இரவு 7 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புச் சுவரின் உயரத்தை அதிகரித்து, பிரதிபலிப்பு வில்லைகளை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com