காவல் துறை சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம்
By DIN | Published On : 18th May 2019 04:04 AM | Last Updated : 18th May 2019 04:04 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் நகரக் காவல் நிலையம் சார்பில் திருட்டைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுத் துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் உத்தரவின் பேரில், நகரக் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி தலைமையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
அதில் வெளியூருக்குச் செல்லும்போது, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு செல்ல வேண்டும். வீடு வாடகைக்கு வருவோரின் ஆதார் அட்டை மற்றும் செல்லிடப்பேசி எண்கள் ஆகியவற்றை பெற வேண்டும், வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது.