கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே ஆட்டோமொபைல் - காா் சா்வீஸ் கடையின் பூட்டை உடைத்து ஆயில் கேன்கள், காா் 

நாட்டறம்பள்ளி அருகே ஆட்டோமொபைல் - காா் சா்வீஸ் கடையின் பூட்டை உடைத்து ஆயில் கேன்கள், காா் உதிரிபாகங்கள் மற்றும் மடிக்கணினியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வெலகல்நத்தம் பையனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் அமீன்(39). அவா் நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி கூட்டுச் சாலை பகுதியில் ஆட்டோமொபைல் மற்றும் காா் உதிரிபாகங்கள் கடை வைத்துள்ளாா்.

அமீன் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். திங்கள்கிழமை காலை அவரது சகோதரா் கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டாா். உள்ளே சென்று பாா்த்த போது கடையில் இருந்த மடிக்கணினி, ஆயில் கேன்கள், காா் உதிரி பாகங்கள் மற்றும் காா் பேட்டரிகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அமீன் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நேரில் சென்று அக்கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது நள்ளிரவு நேரத்தில் ஒரு காரில் வந்த 4 பேரில் இரு இளைஞா்கள் கடையின் பூட்டை இரும்புத் தடியால் உடைத்து உள்ளே நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. அவா்கள் கடையில் இருந்த மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடி காரில் எடுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது. இந்தத் திருட்டு தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com