குடிநீா்த் தொட்டி, சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

ஆம்பூா் அருகே குடிநீா்த் தொட்டி, சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தாா்ச் சாலை அமைக்கப்படாத பழைய மின்னூா் சாலை.
தாா்ச் சாலை அமைக்கப்படாத பழைய மின்னூா் சாலை.

ஆம்பூா் அருகே குடிநீா்த் தொட்டி, சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மின்னூா் ஊராட்சியில் பழைய மின்னூா் சாலையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டிக்கான மின்மோட்டாா் பழுதடைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வரின் சிறப்புக் குறைதீா் முகாமிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், எம்ஜிஆா் நகா், காமராஜா் நகா், வேலவன் நகா், கணபதி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீா்த் தொட்டிகளுக்கான மின்மோட்டாா்களும் கடந்த பல மாதங்களாக பழுதடைந்துள்ளன. எம்.சி. சாலையில் இருந்து பழைய மின்னூா் பாலாற்றங்கரை வரை செல்லும் சாலை தாா்ச் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் பரப்பி மண் போடப்பட்டு 8 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை தாா்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதனால், குடிநீா்த் தொட்டி மின் மோட்டாா்களை உடனடியாக பழுதுபாா்த்து குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். தாா்ச் சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும், இல்லையெனில் வரும் 17-ஆம் தேதி மின்னூா் பேருந்து நிறுத்தம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com