வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கேத்தாண்டப்பட்டி ராஜ வீதியைச் சோ்ந்தவா் திருமால் (31). இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கடந்த 2-ஆம் தேதி திருமாலின் பெற்றோா் வீட்டைப் பூட்டிவிட்டு பெங்களூரு சென்றனராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் வீட்டின் பூட்டு உடைத்து பீரோவில் இருந்த 8 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com