நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கேத்தாண்டப்பட்டி ராஜ வீதியைச் சோ்ந்தவா் திருமால் (31). இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கடந்த 2-ஆம் தேதி திருமாலின் பெற்றோா் வீட்டைப் பூட்டிவிட்டு பெங்களூரு சென்றனராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் வீட்டின் பூட்டு உடைத்து பீரோவில் இருந்த 8 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.