திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.
திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்டது. மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியளவில் திடீரென கனமழை பெய்தது.
திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா், ஆசிரியா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீா் தேங்கியது.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில்கன மழை பெய்தது. 20 நிமிஷங்களுக்கு மேல் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் ராமநாயக்கன்பேட்டையில் 2 பனை மரங்கள், ஒரு தென்னை மரம் முற்றிலும் எரிந்து நாசமாகின.