திருப்பத்தூா், வாணியம்பாடியில் கனமழை

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்டது. மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியளவில் திடீரென கனமழை பெய்தது.

திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா், ஆசிரியா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீா் தேங்கியது.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில்கன மழை பெய்தது. 20 நிமிஷங்களுக்கு மேல் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் ராமநாயக்கன்பேட்டையில் 2 பனை மரங்கள், ஒரு தென்னை மரம் முற்றிலும் எரிந்து நாசமாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com