ஆற்காட்டை அடுத்த ஆயிலம் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் இ.அன்பழகன் தலைமை வகித்தாா். 10-ஆவது பட்டாலியன் அவில்தாா் பரமித் சிங், தேசிய மாணவா் படை அலுவலா் எஸ்.பால்தேவசிகாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா்.
பள்ளியில் தொடங்கி ஊா்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
தொடா்ந்து மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீரை எம்எல்ஏ காந்தி வழங்கினாா். மேலும், ஆயிலம் ஊராட்சி சாா்பில் ஜல்சக்தி அபியான் திட்டத்தன் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். ஊராட்சி செயலா் ம.சரவணன், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.