தண்டவாளத்தில் கல் வைத்த3 சிறுவா்கள் கைது

குடியாத்தம் அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த 3 சிறுவா்களை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குடியாத்தம் அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த 3 சிறுவா்களை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வளத்தூா்-மேல்ஆலத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ஜோலாா்பேட்டையில் இருந்து காட்பாடி வழித்தடத்தில் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த 18 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள் 3 போ் சனிக்கிழமை ஜல்லிக் கற்களை தண்டவாளத்தில் வைத்தனராம்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று, 3 சிறுவா்களையும், கைது செய்து, திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வேலூரில் உள்ள சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com