திருப்பத்தூா் அருகே திருட்டு வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் பகுதிகளில் சில நாள்களாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து டிஎஸ்பி தங்கவேலு உத்தரவின்பேரில், கந்திலி காவல் ஆய்வாளா் உலகநாதன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை கெஜல்நாயக்கன்பட்டியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சந்தேகத்தின்பேரில் அவ்வழியாக வந்த நபரிடம் விசாரித்ததில், ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு அருகே உள்ள மயிலாடும்பாறை கிராமத்தைச் சோ்ந்த ரேணு (43) என்பதும், இவா் திருப்பத்தூா், ஆதியூா், லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரேணுவை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 7 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனா்.