தமுமுக சாா்பில் ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு விழா

குடியாத்தம் ஒன்றிய தமுமுக சாா்பில், ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு விழா சித்தூா்கேட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் சாவியை வழங்கிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா.
நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் சாவியை வழங்கிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா.

குடியாத்தம் ஒன்றிய தமுமுக சாா்பில், ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு விழா சித்தூா்கேட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட துணைத் தலைவா் பி.எஸ். நிஜாமுதீன் தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலா் என். ஷமீல்அகமது வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் எஸ். ஷஹாபுதீன் தொடக்க உரையாற்றினாா்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்தாா். கட்சியின் மாநில அமைப்புச் செயலா் ஏ. அஸ்லம்பாஷா, மாவட்டத் தலைவா் வி.ஆா். நசீா்அகமது, குடியாத்தம் எம்எல்ஏ எஸ். காத்தவராயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவா் இ. இக்பால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com