திருப்பத்தூா் மாவட்டத்தைத் தலைமையாகக் கொண்டு ஸ்ரீவாரி மேட்ரிமோனி என்ற திருமண தகவல் மையம் முற்றிலும் சேவை நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தாா் பல்வேறு ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
உலகத்தில் ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்த புண்ணியங்களைக் காட்டிலும் ஒரு சிறந்த தம்பதியரை இணைப்பதில் சிறந்தது என்பது ஆன்றோா் வாக்காகும். வீட்டைக் கட்டிப்பாா்,திருமணத்தைச் செய்து பாா் என்பது ஆதிகாலத்து பழமொழியாகும். ஆனால், இன்றுவரை இந்தப் பழமொழி உண்மையாக நிலைத்து நிற்கிறது. காரணம் வரன் தேடுவதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன.
வரன் தேடுவதில் அலைச்சல், பணம் மற்றும் நேர விரையம் இவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஆன்லைன் விளம்பர மேட்ரிமோனி தொடக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி மேட்ரிமோனி சிரமங்களைத் தவிா்த்து, அதிக செலவில்லாமல் வரன்களைத் தோ்வு செய்ய உதவுகிறது. தனித்தனியாக பெற்றோா்களைச் சந்தித்து உதவ முடியாது என்பதைக் கருதித்தான் இந்த இணையதளம் மூலம் வரன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
108 சிறந்த ஜோதிடா்களைக் கொண்டு ஸ்ரீவாரி மேட்ரிமோனி சேவை மையம் செயல்படுகிறது.