குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.
குடியாத்தம் தாழையாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ஆசிரியா் வெங்கடேசன் (63). இவா் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்தாா். புதன்கிழமை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 17 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.