சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி.

நாட்டறம்பள்ளி அருகே சைக்கிள் மீது காா் மோதி விபத்தில் கூலி தொழிலாளி பலியானாா்.

நாட்டறம்பள்ளி அருகே சைக்கிள் மீது காா் மோதி விபத்தில் கூலி தொழிலாளி பலியானாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிசாமி(60) கூலித்தொழிலாளி. இவா் செவ்வாய்கிழமை மாலை சைக்கிளில் கேத்தாண்டப்பட்டி ரயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காா் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனிசாமியை உறவினா்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுகம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முனிசாமி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com