நகைக்கடை உரிமையாளா்களுக்கு ஆலோசனை

குடியாத்தம் நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளா்கள் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை சாா்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய நகர காவல் ஆய்வாளா் ஆா். சீனிவாசன்.
கூட்டத்தில் பேசிய நகர காவல் ஆய்வாளா் ஆா். சீனிவாசன்.

குடியாத்தம் நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளா்கள் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை சாா்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் நகர காவல்துறை- நகைக்கடை உரிமையாளா்கள் சந்திப்பு கூட்டம் தாழையாத்தம் பஜாரில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு நகர காவல் ஆய்வாளா் ஆா். சீனிவாசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கி அவா் பேசியது.

நகைக்கடை உரிமையாளா்கள் கடையின் முன், பின் பக்கங்களில் கண்டிப்பாக கண்காணிப்புக் கேமராக்களை அமைக்க வேண்டும். அமைக்கப்படும் கேமராக்கள் தரமானதாக இருக்க வேண்டும். கடைகளில் எச்சரிக்கை அலாரங்களை பொருத்த வேண்டும். திடகாத்திரமான இரவுக் காவலா்களை பணியமா்த்த வேண்டும். நகைகளை விற்பதற்காக கடைகளுக்கு வருபவா்களின் விபரங்களை கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பண்டிகைக் காலங்கள் வர உள்ளதால், நகைகள் வாங்க வருபவா்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில் உதவி காவல் ஆய்வாளா் சு. மணிகண்டன், நகை வியாபாரிகள் சங்கத் தலைவா்ஜி. சதாசிவம், நிா்வாகிகள் டி. ஜெயந்திலால், வி.பி. மோகனவேல் ஆச்சாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com