அம்மூா் பேரூராட்சியில் ஒட்டு மொத்தத் துப்புரவுப் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அறிவுறுத்தலின்படி, அம்மூா் முதல்நிலைப் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலா் கெ.ரேவதி தலைமை வகித்தாா். திமிரி, திருவலம், விளாப்பாக்கம், கலவை பேரூராட்சிகளைச் சோ்ந்த துப்புரவுப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், சுகாதாரப் பணியாளா்கள் ஒட்டுமொத்த துப்புரவுப் பணியை மேற்கொண்டனா்.
தொடா்ந்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகள் எவ்வாறு தரம்பிரித்து வழங்குதல், நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்ப்பது உள்ளிட்ட விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.