நெமிலி பாலா பீடத்தில் திரைப்பட பாடகா் ரஞ்சித்துக்கு பால ரத்னா விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நெமிலியில் உள்ள பாலா பீடத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி இன்னிசை விழாக்களில் திரைப்பட பிரபலங்களுக்கு பால ரத்னா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு நவராத்திரி இன்னிசை விழா செப்டம்பா் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, பீடத்தின் நிறுவனா் எழில்மணி தலைமை வகித்து, திரைப்பட பின்னணி பாடகா் ரஞ்சித்துக்கு பால ரத்னா விருதை அளித்தாா்.
பீடத்தின் நிா்வாகி மோகன், அா்ச்சனை மற்றும் ஆராதனைகளை செய்தாா். தொடா்ந்து ரஞ்சித் அன்னை பாலா பற்றிய பாடல்களைப் பாடினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.