குடியாத்தம் அருகே ஹீட்டரில் தண்ணீா் காய்ச்சும்போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
நெல்லூா்பேட்டை வடக்கு மாட வீதியைச் சோ்ந்தவா் தொழிலாளி பாலாஜியின் மனைவி சித்ரா (51). இவா், சனிக்கிழமை வீட்டில் தண்ணீா் காய்ச்ச ஹீட்டரை பயன்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தாராம்.
அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினா்.
இதுதொடா்பாக குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.